search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன் கோவில்"

    சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருதலும் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் யானை “கோமதி” பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7.05 மணிக்கு கோமளாம்பிகை சமேத சந்திரசேகரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு களப்பாகுளத்தில் உள்ள கல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி மதியம் 12.15 மணிக்கு நடந்தது. இதில் சங்கரன்கோவில், களப்பாகுளம், பெருங்கோட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
    சங்கரன்கோவிலில் உள்ள புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள்.
    அரியும் சிவனும் ஒன்றுதான் என்று உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன்கோவில். சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூல காரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர்.

    அன்னை என்ன செய்வாள்? இருவரும் ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, பொதிகை மலைப் பகுதியில் புன்னை விருட்சம் உள்ள சங்கரன்கோவிலில் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்” என்றார்.

    பார்வதியும் புன்னைவனத்துக்கு சென்றாள். சங்கரன் கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பவுர்ணமியில் புன்னை வனத்தில் சங்கர நாராயணராக உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சி கொடுத்தார்.

    ஒரு புறம் சிவப்பு. மறுபுறம் சியாமளம். ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறுபுறம் வஜ்ர-மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம் சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறுபுறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம் துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான். இப்படி அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என சிவ பெரு மான் கூறினார்.

    ‘இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருஉருவைக் கொள்ள வேண்டும்‘ என அம்பாள் பிரார்த்தித்தாள். ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியாருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.

    சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கர லிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பொதுவாக ஸ்ரீசக்ர பிதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்.

    ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு. மனமாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட அதில் உட்கார்ந்து தியானித்துக் கொள்ளலாம். இக்கோவிலில் உள்ள புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
    தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை சார்ந்துள்ள மேலச்சங்கரன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
    தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை சார்ந்துள்ள மேலச்சங்கரன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொடியேற்று விழா நேற்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    ஆடித்தபசு திருவிழா வினை முன்னிட்டு திருவிழா நாட்களில் தினமும் காலை , மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்கு தென்காசி தெற்கு மாசி வீதியில் நடைபெறும். இந்த தபசுக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்காசிக்கு வருகை தருவார்கள்.

    இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி நடைபெறும். பின்னர் 3 முறை சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.

    இந்த விழாவில் 28 -ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.
    ×